இன்று தொட்டதெற்கெல்லாம் 'வாஸ்து' பார்க்க மக்கள் ஆரம்பித்துவிட்டார்கள். வாஸ்து என்றால் என்ன? அது உண்மையில் வேலை செய்யுமா?

பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகியவை தாம் இப்பிரபஞ்சத்தை இயக்கி வருகின்றன. இந்த பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைந்து செயல் பட்டால் நல்ல சக்தி (Positive energy)  உருவாகும் என்பது உண்மையாகும்.

நாம் கட்டும் வீடுகளில் இந்த ஐந்து சக்திகளை  ஒருங்கிணைந்து செயல் படுத்துவதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் பயன்படுகிறது.

அதாவது வாஸ்து படி கட்டும் வீடுகளில் ஐம்பூதங்களும் ஒருங்கிணைந்து செயல் படும். ஆகையால் நல்ல சக்தி அத்தகையான வீடுகளில் இருக்கும். அதனால் அவ்வீடுகளில் வசிப்போர் நல்ல எண்ணங்களை எண்ணுவர். வாழ்க்கையில் வெற்றி பெறுவர். நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

நம் பண்டைய கோவில்கள் வாஸ்து சாஸ்திரம் படி அமைந்துள்ளன.

வாஸ்து சாஸ்திரம் வேலை செய்கிறது என்பதே என் நம்பிக்கை. ஆனால் இன்றைய வாஸ்து நிபுணர்கள் எந்த அளவுக்கு வாஸ்து ஞானம் உள்ளவர்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.




வாஸ்து சாஸ்திரம் என்னவோ உண்மை தான். ஆனால் இன்றைய வாஸ்து நிபுணர்களை உண்மை என்று  உறுதியாக  சொல்ல முடியாது.

ஆகையால் வாஸ்து ஓரளவுக்கு மட்டுமே  பார்க்கலாம் என்பதே என் கருத்து. வாஸ்துவிற்காக கட்டடத்தை இடிப்பதிலோ, நடை முறைக்கு ஒவ்வாத கட்டிட அமைப்புகளை அமைப்பதிலோ எனக்கு உடன்பாடு இல்லை.

சில அடிப்படை வாஸ்து நியதிகள் உள்ளன. அவை கடைப் பிடிப்பதற்கு எளிமையானவை. அவற்றை நிச்சயமாக கடைப்  பிடிக்கலாம்.

அடிப்படை வாஸ்து நியதிகள் எவை என்பது பற்றி இன்னுமொரு வலைப்பூவில் விரிவாக கூறுகிறேன்.

வாழ்க வளமுடன்!

              ஜோதிடம் உண்மையா?

                               மறு பிறவி உண்டா?

Post a Comment

 
Top